ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எப்போதும் துணிச்சலுடன் கருத்துகளை வெளியிடுகிறவர் கங்கனா ரணாவத். அவர் வெளியிடும் கருத்துகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்துகளோடு ஒத்து போவதால் அவரை பா.ஜ.,வின் ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதோடு மஹாராஷ்ராவில் ஆளும் சிவசேனா கட்சி மீது துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்தவர். மும்பைக்குள் நுழைய விட மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் மிரட்டியபோது அதை மீறி கெத்தாக வந்து இறங்கியவர்.
இந்த நிலையில் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலின்போதே அவரை தேர்தலில் நிறுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. அவர்தான் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால் இந்த முறை போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு அவரை சந்தித்த செய்தியாளர்கள் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டனர். அதற்கு அவர் “கிருஷ்ணர் அருள் புரிந்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பா.ஜ., அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம். கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும். துவாரகை ஒரு தெய்வீக நகரம். இங்குள்ள அனைத்தும் அற்புதம். ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார். அவரைக் காணும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இறைவனை தரிசனம் செய்ய நான் எப்போதும் இங்கு வர விரும்புகிறேன், என்றார். கங்கனா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.